உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ். நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில், அதன் உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், கடந்த 30 வருடங்களாக பொலிஸாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் இருந்து வந்தது.
அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டவில்லை.

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான 07 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர் வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.
எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொலிஸார் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை.
இந்த நிலையில், இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்து, அங்குள்ள பொலிஸாரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளித்தனர்.
தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் தனித்து இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் தமக்கு காணி இல்லை என வேறு இடத்தில் நீண்ட காலமாக வாசித்து வந்தனர். இன்றைய தினம் காணி கையளிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.


புதிய இணைப்பு தகவல் - தீபன்
முதலாம் இணைப்பு
யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தின் மூலம் அந்தக் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
கோப்பாய், இராச வீதியில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி பல வருடங்களாகப் பொலிஸாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ளது.
கோரிக்கை முன்வைப்பு
இந்த நிலையில் குறித்த காணியின் உரிமையாளர்கள், காணியைத் தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்குப் பலன் கிட்டவில்லை.
இவ்வாறான சூழலில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்குச் சொந்தமான 9 உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன்போது பொதுமக்களின் காணியில் இருந்து வெளியேறி, அந்தக் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவு
எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொலிஸார் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை. இந்த நிலையில், இன்று நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்றப் பதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று, அங்குள்ள பொலிஸாரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை கோப்பாய் பொலிஸ் நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள் முடிந்துள்ளன. எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri