உயரமான இடத்திற்கு மாற்றப்படும் கொலன்னாவ நகரம்
கொலன்னாவ நகரத்தை அதே பகுதியில் உள்ள உயரமான இடத்திற்கு மாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் புதிய நகரத் திட்டத்தின் கீழ் உயரமான நிலங்களில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதே பகுதியில் பொருத்தமான காணிகள் உள்ளதோடு, கொலன்னாவையின் புதிய நகரத் திட்டத்தின் பிரகாரம் அனுமதியற்ற நிர்மாணங்களைத் தடுக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பு
இத்திட்டத்தின்படி களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பு தயாரிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் கொலன்னாவ நகரம் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் பொது இடங்களும் நீரில் மூழ்கியிருந்தன. இதனைத்தொடர்ந்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதியின் அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, பிரேம்நாத் சி.தொலவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
