5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல் இடம் பிடித்த விராட் கோலி
ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை ஐசிசி பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.
புதிய தரவரிசை
இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ஓட்டங்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி 785 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கோலி முதலிடம்
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் இருந்து ரோகித் சர்மா 3 ஆம் இடம் பிடித்துள்ளார். நியூசில்ந்து வீரர் டேரில் மிட்செல் (784 புள்ளிகள்) 2 இடம் பிடித்துள்ளார்.

இப்ராஹிம் சத்ரன் 4-வது இடத்திலும் சுப்மன் கில் 5-வது இடத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் 10-வது இடத்திலும் உள்ளனர்.
இது கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 11-வது முறையாக ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri