சீனா வைத்தியசாலை ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல்: இருவர் பலி
தென்மேற்கு சீனாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கருப்பு நிற உடையணிந்த நபர் ஒருவர் இரண்டு கத்திகளுடன் வைத்தியசாலைக்குள் நுழைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
மற்றுமொரு தாக்குதல்
இதனையடுத்து, சீனாவின் உள்நாட்டு செய்தித்தாள் ஒன்றில் இரண்டு கத்திகளுடன் தாக்குதல் மேற்கொண்ட நபர் வைத்தியசாலை வரவேற்பு அறையில் நிற்பது போன்ற படம் பிரசுரமாகியுள்ளது.

அதேவேளை, காயமடைந்தவர்களில் மருத்துவர்களும் உள்ளடங்குவதாக தாக்குதலை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய நபர் கைதுசெய்யப்பட்டாரா என்பது குறித்த எவ்வித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
மேலும், கடந்த ஒகஸ்ட் மாதம் யுனான் மாகாணத்தில் இடம்பெற்ற மற்றுமொரு கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததோடு 7 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri