பல உயிர்களை காவு கொண்ட கிண்ணியா படகு விபத்து!நாளை துக்கதினம் அனுஸ்டிக்க தீர்மானம்
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலரை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கு அனுதாபத்தினை தெரிவிக்கும் முகமாக கிண்ணியா பிரதேச சிவில் அமைப்புக்களினால் நாளை 25.11.2021 வியாழக்கிழமை துக்கதினம் அனுஸ்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடைகள்,அரச ,தனியார் நிறுவனங்களில் வெள்ளை கொடிகளை பறக்கவிட்டு அமைதியான முறையில் பாடசாலை,வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.