கிண்ணியா படகு விபத்து! கிண்ணியா நகர சபை தலைவர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு(VIDEO)
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் படகு விபத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தலைவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ராசாக் உத்தரவிட்டார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் இன்று பகல் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் மிதப்பு பால உரிமையாளர் உட்பட மூவர் நேற்று கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.