மன்னர் மூன்றாம் சார்லஸின் அமெரிக்க அரசுமுறைப் பயணம்! பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிவிப்பு
மன்னர் மூன்றாம் சார்லஸின் இன்று(27) பிற்பகல் தொடங்கும் அமெரிக்க அரசுமுறைப் பயணம், சில சிறிய மாற்றங்களுடன் "திட்டமிட்டபடி நடைபெறும்" என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
அட்லாண்டிக்கின் இருபுறமும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரும், அரசாங்கத்திடம் ஆலோசனை பெற்ற பின்னரும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுமுறைப் பயணம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மெலானியா ட்ரம்ப் மற்றும் பிற விருந்தினர்கள் காயமின்றி இருந்ததைக் கேட்டு மன்னர் "மிகுந்த நிம்மதி அடைந்தார்" என்று அரண்மனை தெரிவித்தது.

மன்னர் சார்லஸ், காங்கிரஸின் இரு அவைகளிலும் உரையாற்றுவார் என்றும், நியூயார்க்கில் உள்ள 9/11 நினைவிடத்தைப் பார்வையிடுவார் என்றும், வர்ஜீனியாவில் வீரமரணம் அடைந்த அமெரிக்க மற்றும் பிரித்தானிய வீரர்களைக் கௌரவிக்கும் மலர்வளையம் வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த அரசுமுறைப் பயணம் , அதைத் திட்டமிடுபவர்களுக்கு ஏற்கெனவே இராஜதந்திர ரீதியாகச் சவாலானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஃபாக்லாண்ட் தீவுகள் மீதான பிரித்தானியாவின் இறையாண்மை குறித்த தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யக்கூடும் என்ற செய்திகள் வெளியான சில நாட்களுக்குப் பிறகு இந்தப் பயணம் நடைபெற உள்ளது.
ட்ரம்ப் நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு - நொடியில் நடந்த பயங்கரம்! சந்தேகநபர் தொடர்பில் வெளியான பின்னணி
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri