மன்னர் சார்லஸின் சிவந்த கண்..! வெளியான காரணம்
வின்ட்சர் அரண்மனையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனை சந்தித்த போது, மன்னர் சார்லஸின் ஒரு கண் சிவப்பாக மாறியிருந்தது.
இதனையடுத்து, மன்னர் சார்லஸின் உடல்நிலை குறித்து பலரும் கவலைகளை எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், மன்னரின் ஒரு கண்ணில் இரத்த நாளம் வெடித்ததாலேயே கண் சிவப்பாக மாறியிருந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
கவலைப்படக்கூடிய ஒரு விடயமில்லை
அத்துடன், மன்னரின் தற்போதைய புற்றுநோய் சிகிச்சைக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அரண்மனை தெளிவுபடுத்தியுள்ளது.

மருத்துவ ரீதியாக சப்கான்ஜுன்டிவல் எனப்படும் இந்த கண் இரத்தக்கசிவு வலுவான தும்மல் அல்லது இருமல் போன்ற எளிமையான ஒன்றால் கூட ஏற்படலாம்.
எனவே, இது பொதுவாக கவலைப்படக்கூடிய ஒரு விடயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை பொதுவாக ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் தானாகவே இயல்புநிலைக்கு திரும்பிவிடும் எனவும் கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam