கென்யாவில் பலர் உயிரிழப்பு: பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையர்கள் பாதுகாப்பு
கென்யாவில் (Kenya) வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதுடன் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நேற்று (26) கென்யாவின் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வரி விதிப்புகளுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
வரி உயர்வு
நிறைவேற்றப்பட்ட குறித்த யோசனை, 2024-2025 நிதியாண்டில் கூடுதலாக 2.7 பில்லியன் டொலர்களால் வரிகளை உயர்த்துவதை நோக்காக கொண்டிருப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.

இதன்போது கட்டிடத்தின் ஒரு பகுதியை அவர் எரியூட்டியதாகவும், இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தப்பியோடியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன்போது குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் பெருமளவானோர் கைது செய்யப்பட்;டுள்ளனர்.
இந்தநிலையில், கென்யாவில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும், எந்த ஒரு ஆபத்தான சூழ்நிலையும் இல்லை என்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் கனகநாதன் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 18 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri