தாயுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த மகன்: பதுளையில் பயங்கரம்
தந்தை ஒருவர் மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்த கொடூர சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை - கஹட்டருப்ப பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான நபரே இவ்வாறு மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் 33 வயதான மனைவியும் அவரது 17 வயதான மகனுமே இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை
மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரைத் துன்புறுத்தியதே கணவரின் கொலைக்கான காரணம் என சந்தேக நபரான மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு
மேலும், மனைவி கடந்த மே மாதம் 31ஆம் திகதி இந்த கொலையை செய்து, மகனுடன்
சேர்ந்து சடலத்தை காட்டில் வீசிவிட்டு பொலிஸ் நிலையத்தில் தனது கணவனை
காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
