கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஊழியர் பற்றாக்குறை: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கதிரியக்க நிபுணர் மற்றும் உதவியாளர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு மத்திய மாகாண அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் கதிரியக்க நிபுணர் மற்றும் உதவியாளர்கள் இன்மை காரணமாக சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அவசர நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி! சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆதங்கம் (Photos)
அத்துடன் நான்கு அல்லது ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைகாணப்படுவதனால் அவ்வாறான நோயாளர்கள் யாழ்.போதனா வைத்திய சாலை அல்லது தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டள்ளதாக கூறப்படுகிறது.
ஆளணி வெற்றிடங்கள்
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான போதிய ஆளணி வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாத நிலை காணப்படுகின்றது.
மேலும், மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அப்பால் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் சிகிச்சை வழங்கும் ஒரு பிரதான வைத்தியசாலையாக காணப்படுகிறது.
குறிப்பாக வடக்கையும் தெற்கையும் இணைக்கின்ற ஏ-09 நெடுஞ்சாலையின் வவுனியா வைத்தியசாலையிலிருந்து சுமார் 78 கிலோ மீட்டர் தொலைவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து 63 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு பிரதான வைத்தியசாலையாகவும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை காணப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டு மயக்க மருந்து நிபுணர்கள் இருக்க வேண்டிய நிலையில் ஒரே ஒரு மயக்க மருந்து நிபுணரும் இரண்டு சத்திர சிகிச்சை நிபுணர்கள் இருக்க வேண்டிய நிலையில் ஒரு சத்திர சிகிச்சை நிபுணரும் உள்ளதுடன் கதிரியக்க நிபுணர்கள் எவரும் இல்லாத நிலை காணப்படுவதுடன் இரண்டு கதிரியக்க உதவியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் ஒருவர் மாத்திரமே உள்ளதாக கூறப்படுகிறது.
இவரது சேவை நேரம் தவிர சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மேற்படி சேவைகள் இடம்பெறுவதில்லை. இதனால் குறித்த தினங்களில் அனுமதிக்கப்படும் அவசர நோயாளர்கள் இவ்வாறான அவல நிலையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி! சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆதங்கம் (Photos)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri
