கிளிநொச்சியில் அதிகரித்து வரும் சட்டவிரோத மணல் அகழ்வு
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் நிபந்தனைகளைமீறிய விதத்தில் மணல் கொண்டு சென்றமை என்பவற்றுக்கு எதிராக 610 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு கோடியே தொண்ணூற்றி எட்டு இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரும் தமது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக பொலிஸாரினால் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
2021ஆம் ஆண்டில் இவ்வாறு அனுமதிப்பத்திரங்கள் இன்றியும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிச் சென்ற வாகனங்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டில் மாத்திரம் 610 வழக்குகள் தாக்கல்
செய்யப்பட்டு ஒரு கோடியே 98 லட்சத்து 89 ஆயிரத்து 500 தண்டப்பணம் அறவிட பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் 1005 கியூப் மணல்
அரசுடமையாக்கப்பட்ட தாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam