கிளிநொச்சி விவசாயிகளுக்கான யூரியா உரம் விநியோகிக்க நடவடிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான ஒரு தொகுதி யூரியா உரம் உடனடியாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கம நல அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யூரியா உரம் இன்று(24) இத்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் ஆரம்பத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரண்டு மெற்றிக் தொன் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட அரச அதிபரின் முயற்சியின் பயனாக 222 .65 மெற்றிக் தொன் யூரியா கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழான விவசாயிகளுக்குரிய
யூரியா உரம் அந்த பிரதேச கம நல சேவை நிலையத்தின் களஞ்சிய சாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam