கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திணைக்களங்களின் கோரிக்கை, முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை என்பன ஆராயப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றமும் தனித்தனியாக ஆராயப்பட்டன.
முதலாம் இணைப்பு
2025ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையின் கீழ் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் பங்கேற்புடன் நடைபெற்றது.
வரவேற்புரையுடன் கூட்டம் ஆரம்பம்
குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்படவுள்ளன.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்களை வகுத்தல் தொடர்பாகவும் உடனடி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
முன்னேற்ற தன்மை
மேலும் கடந்த ஆண்டில் தீர்மானங்கள் எட்டப்பட்ட விடயங்களின் முன்னேற்ற தன்மையும் குறித்தும் ஆராயப்படவுள்ளன.
இக்கலந்துரையாடலில் யாழ் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், மற்றும் வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், கிளைத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
