கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி திறப்பு (Video)
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
குறித்த திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி லெனின் குமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், நீதி அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘நீதிக்கான அணுகல்’ எனும் தொனிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது, கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்திற்கு உட்பட்ட முரசுமோட்டை மற்றும்
ஐயன்கோயிலடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் கொள்ளைகளை
தடுத்து நிறுத்தி தங்களுடைய விவசாய நிலங்களை பாதுகாத்து தருமாறு கோரி
கமக்காரர் அமைப்புகளால் இன்று நீதியமைச்சரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.