இயக்கச்சி பகுதியில் இருவர் கைது
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இருந்து கஞ்சாவுடன் பயணித்த இருவரை நேற்று (25.09.2024) இயக்கச்சி ஆனையிறவில் வைத்து இராணுவத்தின் உதவியுடன் பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உடுத்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.500 கிலோகிராம் கஞ்சாவுடன் கொடுக்குளாய் சுனாமி வெளியேற்ற பாதையூடாக மோட்டார் சைக்கிளில் இரகசியமான முறையில் பயணித்த இருவரையே பொலிஸார் கைது செய்தனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 18 மற்றும் 25 வயதுடைய கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பளை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
