இரண்டு ஜனாதிபதிகளால் கட்டப்பட்ட சிறுநீரக வைத்தியசாலை சரியாக இயங்கவில்லை: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
பொலன்னறுவையில் 12 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை நோயாளர்களுக்கு உகந்த சேவையை வழங்கத் தவறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.
பொலன்னறுவையில் 12 பில்லியன் ரூபா செலவில் 30 மாத காலப்பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotapaya Rajapaksa) ஜூன் 11ஆம் திகதி திறந்து வைத்தார்.
இந்த வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களிப்புக்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தனது கௌரவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பொலன்னறுவை தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை திறக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள போதிலும் பின்வரும் காரணங்களால் சிறுநீரக நோயாளர்களுக்கு உகந்த சேவையை வழங்க முடியவில்லை.
"1. பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான சிறுநீரக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 201 படுக்கைகள் இருந்தாலும், விசேட வைத்தியர்கள் உட்பட போதுமான சுகாதார ஊழியர்கள் இல்லாததால், 25 வீதமான படுக்கைகள் மாத்திரமே தற்போது பயன்படுத்தப்படுகின்றன. சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை மற்றும் கதிரியக்க சிறப்பு நிபுணர்கள் உட்பட 10 சிறுநீரக சிகிச்சை நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், தற்போது இரண்டு நிபுணர்கள் மாத்திரமே வைத்தியசாலையில் பணியாற்றுகின்றனர்.
2. வைத்தியசாலையில் 100 ஹீமோடையாலிசிஸ் (Hemodialysis) இயந்திரங்களை இயக்குவதற்குத் தேவையான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அவசியமாகின்ற போதிலும், தற்போது 30 இரத்த மாற்று இயந்திரங்கள் மாத்திரமே இயங்குகின்றன.
3. தேசிய சிறுநீரக வைத்தியசாலையை நிர்வகிப்பதற்கு, பணிப்பாளர் உட்படத் தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை வைத்தியசாலைக்குப் பணிப்பாளர் ஒருவரை நியமிக்கவில்லை.
4.சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை உள்ளிட்ட சிறுநீர்க்குழாய் சத்திர சிகிச்சைக்குத் தேவையான நவீன கருவிகள் பொருத்தப்பட்ட 6 சத்திர சிகிச்சை அறைகள் இருந்தும் இதுவரை ஒன்று கூட செயற்படாமை வருத்தமளிக்கிறது. இந்த நவீன ஆய்வுக்கூடம் மற்றும் இயந்திரங்களின் உத்தரவாதக் காலம் பயன்பாடின்றி காலாவதியாகவிருப்பதால், உத்தரவாதக் காலம் முடிந்து இயந்திரங்கள் இயங்கத் தொடங்கும் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால், இயந்திரங்களைச் சரி செய்ய பெரும் செலவாகும்.
5. ஆய்வகங்கள், எக்ஸ்ரே மற்றும் எலக்ட்ரோ என்செபலோகிராபி (ECG) உள்ளிட்ட பரிசோதனைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வைத்தியசாலையிலிருந்தாலும், பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகளை பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் மூலம் ஏற்றிச் செல்ல வேண்டியுள்ளது. காலதாமதமும் ஒரு தீவிர பிரச்சினையாகும்.
மிகப்பெரிய நிதி செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்குச் சுகாதார அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை வெளியிட்டு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோவின் கையொப்பத்துடன் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! Manithan

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர் News Lankasri

சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா... முக்கிய தகவல் News Lankasri

சிஎஸ்கே-வை துவம்சம் செய்த அஸ்வின்! மார்பில் குத்தி கொண்டு தோனி படையை வெறுப்பேற்றி கொண்டாடிய வீடியோ News Lankasri

வெளிநாட்டில் வாழ்க்கையை தொலைத்து நின்ற நபர் கைக்கு வந்த பல கோடி பணம்! புலம்பெயர்ந்த நண்பனால் அடித்த அதிர்ஷ்டம் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022