உலகளாவிய முன்னணியின் பாதுகாப்பு அச்சாக மாறிய ஈரான்! மீண்டும் பொதுவெளியில் கமேனி
உலகளாவிய சியோனிசத்தால் வழிநடத்தப்படும் தவறான முன்னணிக்கு எதிராக ஈரானை ஒரு உலகளாவிய முன்னணியின் பாதுகாப்பு அச்சாக அயதுல்லா அலி கமேனி உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீதான 12 நாள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் விடாமுயற்சியின் கருப்பொருள்கள், எனும் தலைப்பில் கமேனி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13ஆம் திகதி தாக்குதல் நடத்தியது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள்
இதன்போது ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் நேற்று தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னியின் ஹுசைனியாவில் ஆஷுரா இரவு துக்க விழா நடைபெற்றது,
இதில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா செய்யித் அலி கமேனி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 40 நிமிடங்கள் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
