கனடாவில் இந்துக்கோயில் மீது தாக்குதல்: காலிஸ்தானின் முதன்மை அமைப்பாளர் கைது
கடந்த வாரம் கனடா - டொராண்டோ(Canada - Toronto) பகுதியில் உள்ள இந்து கோவிலில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, காலிஸ்தான் அமைப்பின் முதன்மை அமைப்பாளரான இந்தர்ஜீத் கோசல் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிராம்ப்டன் பகுதியின் குடியிருக்கும் 35 வயதான கோசல், கைது செய்யப்பட்ட பின்னர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு பின்னர் நிபந்தனையின்கீழ் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் அவரை, பிராம்ப்டனில் உள்ள ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பீல் பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் ஆதரவு
காலிஸ்தான் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது தாக்குதலின்போது, இந்து - கனேடிய பக்தர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தி கோர் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், பின்னர் வன்முறையாக மாறியிருந்தது.
இந்த மோதல் தொடர்பான காணொளி ஆதாரங்களை சேகரித்துள்ள பொலிஸார், சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக கூறப்பட்ட, கனடாவின் பொலிஸ் அதிகாரியாக செயற்படும் சீக்கியர் ஒருவரும் அண்மையில் கைது செய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam