காணி விடுவிப்பை வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம்
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கேப்பாப்பிலவு கிராமமக்கள் தமது பூர்வீகக் காணியை விடுவிக்க வலியுறுத்தி 25ஆவது நாளாக இன்றையதினம் (18) தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் கேப்பாப்பிலவு மக்களின் 25ஆவது நாள் தொடர்போராட்டத்தில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
தெளிவூட்டல்
அத்தோடு இவ்வாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனக்கு, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களாலும் போராட்டம் தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri