பிரதமருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை! கேப்பாப்புலவு மக்கள் விசனம்
பிரதமருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் தருவதாக தெரிவித்து தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கேப்பாப்புலவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மக்கள் சந்திப்புக்காக இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரினி அமர சூரியவுடன் கலந்துரையாடுவதற்கும், தமது காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளமை தொடர்பில் கலந்துரையாட இருந்ததாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி கேப்பாப்புலவு பூர்வீக மக்களுக்கு கடற்றொழில்நீரியல் வளத்துறை அமைச்சர் ஊடாக நேரம் ஒதுக்கி தருவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது.
கேப்பாப்புலவு மக்கள்
அதற்கமைவாக இன்று ஒரு மணிக்கு வருகை தருமாறும் பிரதமர் அவர்களோடு கலந்துரையாடுவதற்கு நேரம் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தாம் ஏற்கனவே தேர்தல் காலத்தில் புதுக் குடியிருப்புக்கு வருகை தந்த பிரதமரிடம் தனது காணி விடுவிப்பு தொடர்பில் மனுக்களை கையளித்ததாகவும் இது தொடர்பில் நேரடியாக கலந்துரையாடுவதற்கு இன்றைய தினம் வருகை தந்த போதும் கலந்துரையாடலில் தமக்கு நேரம் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |