கிண்ணியா பல்கலைக்கழக கல்லூரி குறித்து மக்கள் கோரிக்கை!
திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட உப்பாறு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, பாதியில் இடை நிறுத்தப்பட்ட பல்கலைக்கழக கல்லூரியை விரைவில் புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிண்ணியா பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஆதரவற்ற நிலையில் பற்றைக்காடுகள் வளர்ந்து கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாகவும் கட்டங்களின் கண்ணாடிகள், கதவுகள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
பல மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடடம் மது பிரியர்களின் கூடாரமாகவும் மாறிவருவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளர்.
கிண்ணியா பல்கலைக் கல்லூரி
இதுகுறித்து கிண்ணியாவில் இப்பல்கலைக்கழக கல்லூரி அமையப்பெறுவதற்கு காரணமான திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தெளபிக் அவர்களிடம் வினவியபோது,
குறித்த கிண்ணியா உப்பாறு பல்கலைக்கலகம் 2018ஆம் ஆண்டு 12,000 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு, முதல் கட்டமாக ஐம்பது மில்லியன் ரூபா செலவில் 12 ஏக்கர் சுற்று வேலி போடுவதற்கான வேலை திட்டம் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான விடுதியும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது.
பொருளாதார நெருக்கடி
தொடர்ந்தும் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையிலேயே கைவிடப்பட்டுள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் முடக்கப்பட்டு தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் இன்று அனைத்து வேலைகளும் ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளதால் இடை நிறுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் வெளிநாட்டு தூதுவர்களிடம் இவ்விடயம் குறித்து கதைத்து வருகின்றேன். இதற்கான நிதியைப் பெற்று பல்கலைக் கழக கல்லூரியை இம்மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளில், நாட்டில் பொருளாதார சீர்கேடுகள் இல்லாமலிருந்தால் இக்கட்டிடம் அமைந்திருக்கும் இவ்வருடம் கட்டிடம் முடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.










ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
