பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கென்ட் பிரீமியர் லீக் கரப்பந்தாட்ட போட்டி
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களால் பல ஆண்டுகளாக கழக ரீதியில் விளையாடப்படும் Kent premier league போட்டி எதிர்வரும் 31/08/2025 அன்று மூன்றாவது முறையாக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியானது தென்கிழக்கு இலண்டனில் உள்ள Abbeywood என்னும் பகுதியிலுள்ள வெளியக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பிரிமியர் லீக் போட்டி
இந்த KPL போட்டிக்காக 12 பிரிமியர் லீக் அணிகளில் விளையாடுவதற்காக 72 வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏல நிகழ்வானது எதிர்வரும் 09/07/2025 புதன்கிழமை மாலை Shooter’s Hill Sixth Form College கேட்போர்கூட மண்டபத்தில் நேரலை ஒளிபரப்புடன் நடைபெறவுள்ளது.

அத்துடன் இந்த KPL போட்டியின் சிறப்பம்சமாக வளர்ந்து வரும் புதிய கழகங்களிற்கான போட்டியும் நடைபெறவுள்ளது.
கடந்த இரு ஆண்டுகள் பல ஆயிரம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக நடைபெற்ற இந்த பிரிமியர் லீக் போட்டியானது இந்த ஆண்டும் மூன்றாவது முறையாக KPL குழும நிர்வாகிகளான ரகு, கிரி, கிருஷ்ணா, சுபாஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரின் ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஹோர்முஸுக்கு அருகில் மாபெரும் குண்டுகளால் தாக்குதல்.. பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்
மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
QR குறியீட்டில் சிக்கல்கள்! கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் - இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam