கெஹெலியவின் மனுவை பரிசீலிக்க இணங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இணங்கியுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை, தம்மை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்ற உத்தரவிடுமாறு கோரியே, ரம்புக்வெல்ல இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த மனுவை, 2024 மே 31 அன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணை
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே மனுவை மே 31-ம் திகதி முதல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகள் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடையும் வரையில், தம்மை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்ற உத்தரவிடுமாறு கோரி, சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவையும், மே 30ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam