கெஹெலியவின் மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் பேரில் அவர்கள் இன்று(19) கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி ரம்புக்வெல்லவின் கணவர் இசுரு புலஸ்தி பண்டார போல்கஸ்தெனிய ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை
பணமோசடி குற்றச்சாட்டின் கீழ், 134,097,731.39 ரூபா மதிப்புள்ள சொத்துக்கள், 40,000,000 ரூபா மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 20,500,000 ரூபா மதிப்புள்ள பென்ஸ் கார் தொடர்பான விசாரணையை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

குறித்த விசாரணை தொடர்பாக, ஏறத்தாழ 40 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு முதலீட்டுத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam