மீண்டும் பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்த கெஹலிய ரம்புக்வெல
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கொழும்பு மேல் நீதிமன்றத்தில்
பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.
அத்துடன், தமது பிணைக் கோரிக்கை மாளிகாகந்த நீதிவானால் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நீதவானின் பிணைக் கோரிக்கையை நிராகரிக்கும் உத்தரவை இடைநிறுத்தி, ஏதாவதொரு நிபந்தனையின் அடிப்படையில் தன்னை பிணையில் விடுவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தரமற்ற மருந்து விநியோகம்
இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சரின் இந்தப் பிணைக் கோரிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (18.03.2024) பரிசீலிக்கப்படவுள்ளது.
மேலும், தரமற்ற மருந்து விநியோகம் தொடர்பான வழக்கிலேயே கெஹலிய ரம்புக்வெல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |