இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டை நீண்டகாலமாக இழுபறி நிலை காணப்படுவது குறித்து கோபா குழு கவனம் செலுத்தியுள்ளது.
அண்மையில் கோபா எனப்படும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு ஒன்றுகூடிய போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய ஈ-கேட் (E-gate) வசதி தொடர்பான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்குக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதிநிதி ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டுமென சிவில் விமான சேவைகள் அதிகாரசபையினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஈ-கேட் வசதி
எனினும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காததால் மொத்த ஈ-கேட் வசதி வழங்குவதிலும் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து குழு தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் இதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
தொழில்நுட்பக் கருவி
விமான நிலைய நெரிசலை குறைப்பதற்கு சுய பரிசோதனை உள்ளிட்ட நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு முன்னேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதில் 4 ஆண்டுகளாகத் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam