டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கியவர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இரசாயனங்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்க கைப்பற்றப்பட்டுள்ளன.
தடுத்து வைத்து மேலதிக விசாரணை
கொழும்பு-10 பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான இவர், டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் இன்று காலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
