கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட இருவர் கைது
பெருந்தொகை தங்கத்தினை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளியே கொண்டு செல்ல முயன்ற மதகுரு ஒருவரும், பெண்ணொருவரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்காவிற்கு புனித யாத்திரை சென்று இலங்கை திரும்பிய மட்டக்களப்பு மற்றும் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த மதகுரு ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
சந்தேகநபர்களின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு கோடியே தொண்ணூறு இலட்சம் ரூபா பெறுமதியான 859 கிராம் நிறையுடைய 24 மற்றும் 22 கரட் நகைகள் கைப்பற்றப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் நகைகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri