காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 7 பேர் கைது
தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி 7000 மில்லி லீற்றர் கசிப்பு ,630 மில்லி கிராம் ஹெரோயின், ஒரு தொகை ஐஸ் மற்றும் கஞ்சா என்பவற்றைக் கடத்திய 7 பேரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்துள்ளார்.
நேற்று(18) இரவு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் உத்தரவின் பேரில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர் குமாரசிரியின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, மாவிலங்கத்துறை, காத்தான்குடி ஆகிய இடங்களிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர்.
கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
