காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 7 பேர் கைது
தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி 7000 மில்லி லீற்றர் கசிப்பு ,630 மில்லி கிராம் ஹெரோயின், ஒரு தொகை ஐஸ் மற்றும் கஞ்சா என்பவற்றைக் கடத்திய 7 பேரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்துள்ளார்.
நேற்று(18) இரவு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் உத்தரவின் பேரில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர் குமாரசிரியின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, மாவிலங்கத்துறை, காத்தான்குடி ஆகிய இடங்களிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர்.
கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri
