கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவின் பாதயாத்திரை நேற்று மட்டகளப்பில்.. 14ஆம் திகதி வரை நீடிப்பு
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவினை முன்னிட்டு யாழ். தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தினை வந்தடைந்துள்ளது.
இந்த நிகழ்வு, நேற்று(21.06.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
தெல்தெனியவில் வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்! காதலன் மற்றும் மனைவி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
மட்டக்களப்பை வந்தடைந்த குழுவினர்
மே மாதம் 23ஆம் திகதி தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தலைமையில் ஆரம்பமான பாத யாத்திரையானது, வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை 7 மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகநீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.
நேற்று(21) மாலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்த பாதயாத்திரை குழுவினர், அங்கு தங்கியிருந்து இன்று(22) காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு மீண்டும் பாதயாத்திரையினை ஆரம்பித்துள்ளனர்.
14ஆம் திகதி வரை தொடரும் பாதயாத்திரை
இந்நிலையில், உகந்தைமலை முருகன் ஆலயத்திலிருந்து யால காட்டு வழிப்பாதை திறக்கப்படும் போது அதன் ஊடாக பயணித்து, எதிர்வரும்14ஆம் திகதி கதிர்காம கந்தன் ஆலயத்தினை சென்றடையவுள்ளதாக சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ கதிர்காம கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆடிவேல் விழா மகோற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
15 தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இந்த திருவிழா, ஜூலை மாதம் 29 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.


காலக்கெடு எதுவும் விடுக்கப்படவில்லை.. இலங்கை கிரிக்கெட் தொடர்பில் வெளியான தகவல் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு