காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய காத்தான்குடி செல்லும் விசேட குழு
காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழு காத்தான்குடிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சாட்சியங்களை உறவினர்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க முடியும் என படுகொலை செய்யப்பட்டோர் தொடர்பான ஏறாவூர் ஞாபகார்த்தப் பேரவையினால் பொதுமக்களுக்கு பொது அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் வருகை

இது தொடர்பாக பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் விடுக்கப்பட்ட பொது அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் திங்களன்று (26.09.2022) காத்தான்குடிக்கு வருகை தரவுள்ளது.
சாட்சியங்களை சமர்ப்பித்தல்

எனவே அந்த சந்தர்ப்பத்தில் ஆணைக்குழு முன் தோன்றி பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் இந்த பிரதேசத்திலிருந்து காணாமலாக்கப்பட்டு அல்லது கடத்தப்பட்டு இல்லாமலாக்கப்பட்டோரின் விபரங்களை சமர்ப்பித்து சாட்சியங்களை பதிவு செய்ய முடியும்.
இவ்விடயம் குறித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சாட்சியங்களில் விபரங்களை சமர்ப்பிக்க முடியும்.”என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 13 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan