திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் - திருகோணமலை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பத்து பேரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை கடலோர பாதுகாப்பு மண்டலத்திற்குள் அங்கீகரிக்கப்படாத குடிசை கட்டப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத்துறை தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ப தேரர் உள்ளிட்டோர் இன்று (09.02.2026) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விஹாரையின் விகாராதிபதி பலாங்கொட கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், திருகோணமலை சுகிதவன்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் உட்பட 10 பேர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடலோர பாதுகாப்பு மண்டலத்திற்குள் அங்கீகரிக்கப்படாத குடிசை கட்டப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத்துறை தாக்கல் செய்த முறைப்பாட்டின் பேரில் இந்த வழக்கு தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு மேலதிக செய்தி - ரொசான்
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri