பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன்(கருணா), முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்(பிள்ளையான்) ஆகியோர் இணைந்துள்ளனர்.
குறித்த கட்சியில் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இன்று (22) கைச்சாத்திட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுடன் இந்த உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைத்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் கட்சியை உருவாக்கியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
இதனையடுத்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் குறித்த தரப்பினர் களமிறங்கவுள்ளனர்.
இந்த நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan