கபில சந்திரசேனாவின் பிரேத பரிசோதனை : மே 12ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (09) நடத்தப்பட உள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் நியமித்த ஐவர் கொண்ட நீதி மருத்துவ சபையால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என கோட்டை நீதிபதி பாசன் அமரசேன உத்தரவிட்டார்.
மே 12ஆம் திகதிக்குள்
விசாரணையின் முடிவுகளை மே 12ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி மேலும் உத்தரவிட்டுள்ளார்.

கபில சந்திரசேனவின் உடல், கொள்ளுப்பிட்டி, பெட்ரிஸ் வீதியில் அமைந்துள்ள ஒரு இல்லத்தில் நேற்று காலை (08) கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam