கபிலவை வெளியே கொண்டு வர அரவிந்த போட்ட திட்டம்..!
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையிலே, அரவிந்த டி சில்வாவின் வீட்டின் பிரதான நுழைவாயிலினால் சிலர் உள்ளே சென்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கபில இறப்பதற்கு முந்தையதினம் அவரை பிணையில் வெளியே எடுத்தவர்கள் வீட்டிற்கு வருகை தந்ததாக அரவிந்த டி சில்வாவின் மனைவி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்கள் தான் பிரதான நுழைவாயிலினால் உள்ளே நுழைந்தார்களா அல்லது வேறு யாரும் னெ்றார்களா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
அத்தோடு, கபில சந்திரசேனவின் தொலைபேசியை அன்லொக் செய்து கொள்வதற்காக சி.சி.டியின் உதவியை நாட உள்ளதாகவும் சிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri