கபில சந்திரசேனவின் மரணம்! வீட்டு பணிப்பெண் வழங்கிய முக்கிய வாக்குமூலம்
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கபில சந்திரசேனவிற்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து (08) திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கபில சந்திரசேனவின் விவகாரம்! அறையில் கண்டுபிடிக்கப்பட்ட வங்கி அட்டை - பணிப்பெண் வழங்கிய முக்கிய வாக்குமூலம்
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை
இதற்கமைய, கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் இரண்டாம் நாள் சாட்சி விசாரணை நேற்று (14) கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நடைபெற்றது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், கோட்டை நீதவான் பசன் அமரசேனவிடம் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட சாட்சி விசாரணையில் கபில சந்திரசேனவின் பார்ன்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் பணிபுரிந்த ஊழியரான சுப்ரஹிம் பிரமிளா எனும் பெண்ணும் சாட்சியமளித்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில்,
மே மாதம் 06 ஆம் திகதி கபில சார் மாலை 5 மணியளவில் வீட்டிற்கு வந்தார். இரவு 8.30 மணியளவில் உணவு அருந்திவிட்டு, நாங்கள் நலமாக இருக்கிறோமா, நாய்களுக்கு உணவு கொடுத்தோமா என்பது போன்ற சில விடயங்களைப் பேசிவிட்டு, உடல் சோர்வாக இருப்பதாகக் கூறி உறங்கச் சென்றார்.
மறுநாள் மாலை 3.30 மணியளவில் காரில் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அரவிந்த சாருடைய சாரதி மீண்டும் காரைக் கொண்டு வந்து எமது வீட்டில் நிறுத்திவிட்டு என்னிடம் சாவியைத் தந்தார்.
இரவு 11.30 மணியளவில் கபில சார் எனக்கு அழைப்பு விடுத்தார். முதலில் 'இரவு அணிவதற்கு ஒரு ஆடையைப் பையொன்றில் போடுங்கள்' என்று கூறினார். பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் அழைத்து, 'இரண்டு சோடி மூக்குக்கண்ணாடிகள், மருந்துகள் மற்றும் ஒரு நீல நிற பெல்ட் ஆகியவற்றைப் போடுங்கள்' எனக் கூறினார்.
'சாரத்திற்கு அடியில் நீல நிற பெல்ட் இருக்கிறது' என்று சொன்னார். அது சார் உடற்பயிற்சி செய்யப் பயன்படுத்தும் ஒரு பெல்ட் ஆகும். அதனை எடுத்துச் செல்வதற்கு வாகனம் ஒன்றை அனுப்புவதாக சார் கூறினார்.
இதன்பின்னர் ஒரு வாகனத்தில் இருவர் வந்தனர். நான் அவர்களிடம் அந்த பையைக் கொடுத்தேன். மறுநாள் சார் வராததால் காலை 6.40 மணியளவில் நான் அவருக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் பதிலளிக்கவில்லை.நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்ததாலேயே நான் அவருக்கு அழைப்பு விடுத்தேன்.
கபில சந்திரசேன நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று எப்போது கூறினார் என இதன்போது நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த பணிப்பெண்,
முந்தைய நாள் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக அழைத்தபோது, எனக்கு நாளை நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது, வெள்ளை ஆடையொன்றை அயர்ன் செய்து வையுங்கள் என கூறியதாக தெரிவித்தார்.
மேலதிக சாட்சி விசாரணை ஒத்திவைப்பு
மே மாதம் 08 ஆம் திகதி காலை 7.25 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு வந்த 05 பேரைக் கொண்ட குழுவினர், வீட்டைச் சோதனை செய்வதற்கான ஆவணம் ஒன்றை காண்பித்து வீட்டைச் சோதனை செய்ததாகக் குறிப்பிட்டார். அப்போது அவர்கள், சார் வீட்டில் இருக்கிறார் தானே, பொய் சொல்ல வேண்டாம், உங்களையும் கூட்டிச்செல்வோம் என கூறியதாகவும் அந்த ஊழியர் தெரிவித்தார்.

காலை 8.15 மணியளவில் அவர்கள் புறப்பட்டுச்சென்ற பின்னரே கபில சந்திரசேன அவர்கள் உயிரிழந்துவிட்டதை தான் அறிந்துகொண்டதாக அந்த ஊழியர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதன்போது கபில சந்திரசேனவின் வீட்டிலிருந்து அரவிந்த டி சில்வாவின் வீட்டிற்கு கபில சந்திரசேனவின் ஆடைகள், மருந்துகள் மற்றும் பெல்ட் அடங்கிய பையை எடுத்துச் சென்ற அரவிந்த டி சில்வாவின் இரண்டு சாரதிகளிடமிருந்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து மேலதிக சாட்சி விசாரணை மே மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர எச்சரிக்கை
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri