கந்தளாய் நகர கூட்டுறவு கிளை திறந்து வைப்பு (Photos)
திருகோணமலை - கந்தளாய் நகரக் கூட்டுறவு கிளை வைபவ ரீதியாக இன்று(19) திறந்து வைக்கப்பட்டது. கந்தளாய் நகரில் சிறந்த வசதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினரினால் திறந்து வைக்கப்பட்டன.
இம்மாவட்டத்தில் நான்கு நகரங்களில் நகரக் கூட்டுறவு கிளைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கந்தளாயில் 23 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நகரக் கூட்டுறவு கிளை திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத், திருகோணமலை மாவட்ட
நாடளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரல மற்றும் கூட்டுறவு திணைக்கள
அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.