கண்டி சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டம்
கண்டி நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு இன்று மாலை வரிசைகளில் நிற்காது புனித தந்த தாதுவைத் தரிசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
கண்டி தலதா மாளிகையில் காட்சிப்படுத்தப்படும் கௌதம புத்தரின் புனித தந்த தாதுவை பார்வையிட நாட்டின் நாலாபக்கங்களில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் நாளாந்தம் கண்டிக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
புனித தந்த தாதுவை பார்வையிட ஏற்பாடு
அவ்வாறு வருகை தரும் பொதுமக்கள் இதுவரை 500 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான கழிவுகளையும், குப்பைகளையும் கண்டி நகரப் பகுதியில் கைவிட்டிருந்தனர்.
அவற்றை சுத்திகரித்து கண்டியை சுத்தமாக வைத்திருப்பதில் கடந்த நாட்களில் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தனர்.
அவர்களின் சேவையைக் கௌரவிக்கும் வகையில் இன்றைய தினம் முக்கிய பிரமுகர்களுக்கான வரிசையொன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதன் ஊடாக வரிசைகளில் காத்திருக்காது கண்டி சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் புனித தந்த தாதுவை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan
