கந்தானை விபத்தில் இளைஞன் பலி: பொலிஸாருடன் முரண்பட்ட உறவினர்களால் அமைதியின்மை
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (19) இடம்பெற்ற இந்த விபத்தில் கிரிஷான் பெரேரா என்ற 18 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் பின்னால் சென்ற இருவரும் தலைக்கவசம் அணியாமல் வெலிகம்பிட்டியவிலிருந்து கொழும்பு - நீர்கொழும்பு வீதியை நோக்கி பயணித்த போது, வெலிகம்பிட்டிய சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் சமிக்ஞை செய்துள்ளனர்.
பொலிஸாருடன் முரண்பட்ட உறவினர்கள்
இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கட்டளையையும் மீறி பிரதான வீதியை நோக்கிச்சென்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியின் நுழைவாயிலில் நீர்கொழும்பிலிருந்து வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சகோதரர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளதுடன், அங்கு அமைதியின்மை நிலவியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
