களுவாஞ்சிகுடியில் விசேட தேவையுடைய பிள்ளைகளை பராமரிக்கும் சிறுவர் இல்லம் மீது மின்னல் தாக்கம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதான வீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் உள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளை பராமரிக்கும் சிறுவர் இல்லத்தில் இரவு மின்னல் தாக்கியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் மாலை வேளையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் மின்னல் தாக்கத்தினால் வீடுகளில் மின்சாதனப் பொருட்களும், இலத்திரனியல் பொருட்களும் பழுதடைந்துள்ள அதேவேளை சிறுவர் இல்லத்திலும் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த சிறுவர் இல்லத்தின் சமையலறை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு எதுவித
பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்கவில்லை என தெரியவருகிறது.