மர்மமாக உயிரிழந்த களுத்துறை மாணவி! சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு - பொலிஸாரின் சந்தேகம்
இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள களுத்துறை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மே மாதம் 26அம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, மாணவியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளின் போது குறித்த விடுதியின் உரிமையாளரது மனைவி நேற்று(11.05.2023) கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் விடுதி உரிமையாளரது மனைவியும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் சந்தேகம்
இதேவேளை, உயிரிழந்த மாணவிக்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து கடைசி தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், ஆசிரியரிடமம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆசிரியருக்கும் குறித்த மாணவிக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மர்மமாக உயிரிழந்த 16 வயதுடைய மாணவியின் வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri
