களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! பொலிஸார் வெளியிட்ட தகவல்
களுத்துறையில் பாடசாலை மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊகங்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய பிரதான சந்தேகநபர் ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை கைது செய்வதற்கு முக்கிய தகவல்களை வழங்கியமைக்காகவும் பொலிஸார் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கடந்த (06.05.2023) ஆம் திகதி களுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் புகையிரத பாதைக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவர் நிர்வாணமாக சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் களுத்துறை நாகொட பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியெனவும் விசாரணையில் தெரியவந்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில், மாணவியுடன் ஹோட்டலுக்கு வந்ததாக கூறப்படும் இளைஞனும், மற்றுமொரு யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மாணவியுடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
