கல்முனை வெஸ்லி கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் (Video)
''அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை வெஸ்லி கல்லூரியினை தொழில்நுட்ப கல்லூரியாக மாற்றும் நடவடிக்கைகள் 90சதவீதம் முடிவிற்கு வந்துள்ளது'' என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை வெஸ்லி கல்லூரியில் தொழில்நுட்ப பீடம் அமைப்பதற்காக கல்வி அமைச்சால் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் எழுப்பிய கேள்விக்கு, கல்வி அமைச்சர் சுசில் பிரமஜயந்த பதில் வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
''கல்முனை வெஸ்லி கல்லூரியில் தொழில்நுட்ப பீடம் அமைப்பதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள கட்டிடம் ஒன்றை தொழில்நுட்ப கல்லூரியாக மாற்றியமைக்க முடியும் என்ற விடயத்தை அடிப்படையாக வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறித்த கல்லூரியை தொழில்நுட்ப கல்லூரியாக மாற்றும் நடவடிக்கைகள் 90சதவீதம் முடிவிற்கு வந்துள்ளது. நிர்மாணப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும்'' தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் தெரிவித்த முழுமையான தகவல்களை இக்காணொளியில் காணலாம்,

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 7 மணி நேரம் முன்

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
