கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாராட்டி கௌரவிப்பு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வு இன்றையதினம் (08.07.2024) இடம்பெற்றுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் கடந்த மே மாதம் உணவுப் பாதுகாப்பு மாதமாகவும், கடந்த ஜூன் மாதம் 24 - 29 வரை ஒரு வார காலம் கைகழுவுதல் விழிப்புணர்வு வாரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.
பல்வேறு வேலைத்திட்டங்கள்
அத்துடன், பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் கல்முனை பிராந்தியத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது, பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |