அம்பாறையில் பேருந்து விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு
அக்கரைப்பற்று - கல்முனை (Kalmunai) பிரதான வீதியிலுள்ள நிந்தவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுபாளையம் பகுதியில் பேருந்துடன் மோட்டர்சைக்கிள் ஒன்று மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை (06.04.2024) பகல் இடம்பெற்றுள்ளதாகவும் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாகவும் நிந்தவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், நிந்தவூர் 5ஆம் பிரிவை சேர்ந்த 72 வயதுடைய அகமட் லெப்பை மீராலெப்பை என்பவரே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நிந்தவூர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |