கொரோனா பரவல்! கதுருவெல நகரில் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது
கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதால், பொலன்னறுவை கதுருவெல நகரின் ஒரு பகுதி நேற்று மாலை முதல் மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கதுருவெல நகரில் உள்ள பிரதான உணவகங்கள் உட்பட சில வர்த்தக நிலையங்களில் நேற்றைய தினம் மாத்திரம் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டப்ளியூ.கேள் குமாரவங்ச தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களில் மாத்திரம் கதுருவெல நகரில் 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நகரில் உள்ள பிரதான வீதியின் நடு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து தொற்றாளர்களும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குமாரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam