கொரோனா பரவல்! கதுருவெல நகரில் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது
கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதால், பொலன்னறுவை கதுருவெல நகரின் ஒரு பகுதி நேற்று மாலை முதல் மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கதுருவெல நகரில் உள்ள பிரதான உணவகங்கள் உட்பட சில வர்த்தக நிலையங்களில் நேற்றைய தினம் மாத்திரம் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டப்ளியூ.கேள் குமாரவங்ச தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களில் மாத்திரம் கதுருவெல நகரில் 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நகரில் உள்ள பிரதான வீதியின் நடு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து தொற்றாளர்களும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குமாரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam