கதிர்காம திருமுருகன் நூலின் எட்டாவது பதிப்பு பழனியில் வெளியீடு
பதுளை சமத்துவ சங்க ஸ்தாபகர் வி. ஞானபண்டிதன் 1940 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட 'கதிர்காமத் திருமுருகன்' என்ற நூலின் எட்டாவது பதிப்பு வெளியிடப்படவுள்ளது.
தமிழ்நாடு - பழனியில் இம்மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறும் முத்தமிழ் முருகன் சர்வதேச மகாநாட்டிலேயே (2024) இந்த நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சன் செல்லத்துரையின் காத்திரமான அணிந்துரையுடன் கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை எச்.எச். விக்ரமசிங்க இப்பதிப்பை வெளியிட்டுள்ளார்.
நூல் சமர்ப்பணம்
இலங்கையின் இந்து சமய வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றிய ஜிந்துப்பிட்டி ஶ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அறங்காவலர்களான அமரர்கள் தேசபந்து வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை, க.சி. சிவசங்கரன்பிள்ளை, ஏ.எஸ்.எஸ். சோமசுந்தரம்பிள்ளை, ஜி.எஸ். விஸ்வநாதபிள்ளை ஆகியோருக்கு இந்த புனித நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பருத்தித்துறை சைவபிரகாச சபையினர் 1940 ஆம் ஆண்டு வெளியிட்ட அட்டைபடமும் பழனியில் 1941இல் வெளியான நான்காம் பதிப்பின் அட்டை படங்களுடன் வேறு முக்கியமான பல படங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.