வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் கச்சத்தீவு
வருடாந்த கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கச்சத்தீவு தீவில் நடைபெறவுள்ளது.
கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒரு சிறிய தீவு ஆகும், இது இலங்கை மற்றும் இந்தியாவின் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகில் அமைந்துள்ளது.
வருடாந்த பெருவிழா வின் பிரதான ஆராதனை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை ஜஸ்டின் ஞானப் பிரகாசம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இலங்கை கடற்படை
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் உத்தரவுக்கமைய, வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் மேற்பார்வையின் கீழ், கச்சத்தீவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதில் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள், தற்காலிக தங்குமிடங்கள், சாலைகள், இறங்குதுறைகள் மற்றும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், அதுமட்டுமல்லாமல், வருடாந்த திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தற்காலிகமாக உயிர்காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவ குழுக்களை இலங்கை கடற்படை அனுப்ப உள்ளது.
மேலும், இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட விகாரையின் வண்ண சலவை , பழுதுபார்ப்பு , சுற்றுப்புற பகுதிகள் மற்றும் வளாகத்திற்கு செல்லும் பாதைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கடற்படை மேற்கொண்டுள்ளது.
இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள்
இதேவேளை, இந்த வருடாந்த உற்சவத்தில் பெருமளவிலான இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கேசன்துறையிலிருந்து தேவாலயத்திற்குத் தேவையான உபகரணங்களை பாதிரியார்கள், அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், பக்தர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஆகியோரை ஏற்றிச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடற்படையினர் செய்துள்ளனர்.
அத்துடன் குறிகாட்டுவான், கச்சத்தீவு படகு சேவை மற்றும் நெடுந்தீவு படகுசேவை என்பன இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







