மக்கள் மறுத்தால் ஆட்சியில் இருந்து விலகுவோம்.. ஜே.வி.பி கட்சியின் அதிரடி பதில்
சூழ்ச்சி மூலம் ஆட்சியை தக்கவைக்கும் எவ்வித நோக்கமும் எமக்குக் கிடையாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம் என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
தனது இந்திய விஜயத்துக்கு முன்னதாக அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் ஆட்சியைப் பொறுப்பேற்போம்.
நாட்டில் ஸ்திரத்தன்மை..
அதனைச் செய்வதற்கு காலம் எடுக்கும். அதற்குரிய அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் ஆசியுடன் ஆட்சியைத் தொடரவே விரும்புகின்றோம். மாறாக மக்கள் விருப்பமின்றி – பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம். ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்குச் சூழ்ச்சி செய்ய மாட்டோம்.
அதிகாரத்தை நாம் மோசடிக்காகப் பயன்படுத்தவில்லை. நாட்டுக்காகவே பயன்படுத்துகின்றோம். நாட்டுக்குச் சேவை செய்த திருப்தியுடன் மரணிக்க வேண்டும். அது போதும். மக்களின் ஆசியுடன் எமது ஆட்சி தொடரும். நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்." என்றார்.